அன்புத் தோழர்களே....
உங்கள் அன்பு நண்பன் தியாகச் செம்மல்...முழு நேர பத்திரிக்கையாளனாக பணிபுரியும் எனக்குள் பிளாக்கில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தற்போது நிறைவடைந்துள்ள எனது ஆர்வத்தை முறையாக பயன்படுத்திட உங்கள் ஆதரவை கோருகிறேன். என்னுடன், நீங்கள் அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கலாம், ஆலோசனைகளையும் வழங்கலாம். ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்நோக்கி என் எழுத்துப் பணியை இந்த பிளாக்கில் துவங்குகிறேன்.