Powered By Blogger

Monday, April 26, 2010

கண்டிப்போம்....குரல் கொடுப்போம்...

வேலை பளு காரணமாக என்னால் தொடர்ச்சியாக பிளாக்கில் எழுத முடியாமல் போகிறது....ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 ஏப்ரல் அன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் மோதலில், பத்திரிக்கையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதை கண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் இன்று எழுதுகிறேன். எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் முதலில் தாக்குதலுக்கு உள்ளாவது பத்திரிக்கையாளர்கள் என்ற தவறான கேடுகெட்ட போக்கு தமிழகத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. நாட்டின் நான்காவது தூண் என சொல்லப்படும் பத்திரிக்கைத் துறை ஊழியர்களை கொலை வெறி கும்பல் வெறி கொண்டு தாக்கும் போது, காக்க வேண்டிய காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கும் கொடுமையை கண்டிக்க வார்த்தைகள் போதாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநிலத்தின் முதலமைச்சர் என அத்தனை பெரிய தலைகளின் முன்னிலையில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற அனுமதிக்கப்பட்டால், சாமானிய மக்கள் எந்த தைரியத்துடன் வெளியில் நடமாட முடியும், எனக்கு தெரிந்து வாழும் போது இறந்த பிறகும் அதிக அவமானத்திற்கு உள்ளான தலைவர்களில் அம்பேத்கர் முன்னிலை வகிக்கிறார். சாமானிய மக்களின் வாழ்வு நலனுக்காய் சண்டமாருதம் செய்த அந்த மாபெரும் தலைவனின் பெயரை வைத்தாலும் பிரச்சினை, அவரது சிலையை வைத்தாலும் பிரச்சினை என்ற போக்கு, இன்னும் இருளில் இருக்கும் கோடான கோடி தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விடியல் ஏற்படுமா? என்ற கேள்வியை அழுத்தமாகவே கேட்க வைக்கிறது. வேறு செய்திகளை சேகரிக்க போகும் போது பத்திரிக்கையாளர்கள் மீது ஏற்படும் மன வருத்தங்களை போலீசார் இது போன்ற வன்முறைகளின் போது தீர்த்துக் கொள்ளும் தவறான உதாரணமும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கொடுமை என்னவெனில் என்.டி.டி.வி ஹிந்து மற்றும் ஜெயா தொலைக்காட்சி நிருபர்கள் தாக்கப்பட்டதை அன்று மாலை அந்த இரண்டு தொலைக்காட்சிகளை தவிர வேறு எந்த தொலைக்காட்சியும் முன்னுரிமை கொடுத்து செய்தியாக ஒளிபரப்பவில்லை. நம்முள் ஒருவன் தாக்கப்படுகிறான் என்றால் நம் உணர்வுகளை கோபத் தீயில் கொப்பளிக்க வேண்டாமா ? எத்தனை நாட்கள் பிழைக்க போகிறோம் இப்படி ஒரு மானங்கெட்ட பிழைப்பை ? மற்றவர் பிரச்சினைக்காய் குரல் கொடுத்து குரல் கொடுத்து ஓய்ந்து போகும் நாம், நம்முள் ஒருவருக்கு அவமானம் என்றால் ஏன் போராட தயங்குகிறோம். நிச்சயம் இது போன்ற எதேர்ச்சதிகார போக்க கண்டிக்க தவறக் கூடாது.....கண்டிப்போம்.... ஓரணியாய் நின்று குரல் கொடுப்போம்....

No comments:

Post a Comment