Powered By Blogger

Wednesday, May 19, 2010

எம் ஈழ மக்கள்


தொப்புள் கொடி உறவா ?
இல்லை
தொன்று தொட்ட மரபா ?
எதுவென தெரியாது
ஆனாலும் அவர்கள்
எம்மவர்கள் !
நான் பேசும்
மொழியை
நன்றாய் பேசுபவர்கள்!
காப்பவன் யார் ?
அழிப்பவன் யார் ?
எதுவும் அறியாது
பதுங்கு குழிக்குள்
பாத்தியப்பட்டவர்கள் !
கிளஸ்டர் குண்டுகளுக்கு
கொத்து கொத்தாய்
மாண்டவர்கள் !
கந்தகத்தை சுவாசித்து சுவாசித்து
நுரையீரல் நோய்ப்பட்டவர்கள் !
அரசியல் அறியாததால்
அதிகாரத்தை விட்டவர்கள்
இன்று பலர் அரசியல் நடத்த
அஸ்திவாரம் ஆனவர்கள் !
தனி ஈழம் கிடைத்தால் என்ன ?
தனி நாடு கொடுத்தால் என்ன ?
மாண்டவர் மீள்வதில்லை !
சிரிக்கும் புத்தரின் சீடர்களே
இனியாவது வாழ விடுங்கள்
எம் மக்களை !
துயர் கொண்ட நெஞ்சங்கள்
இன்று துவண்டிருக்கலாம்
ஆனால்
என்றுமே தூங்கிவிடுவதில்லை!
பூந்தோட்டத்தில்
புரட்சி பிறப்பதில்லை
எகாதிபத்தியத்தின் பிடி
நீண்ட நாள் நிலைப்பதில்லை !
விடியலுக்கு இல்லை வெகுதூரம்
மௌனமாய் காத்திருப்போம் சில காலம்.....

3 comments:

  1. Excellent!!! keep it up!!! What a depth in your thoughts!!!

    ReplyDelete
  2. Very good but we should not be kept silent, we must act to international solidority for ElaTamilar solution

    ReplyDelete