Powered By Blogger

Friday, May 21, 2010

அவள்....?


என்னுடன் சிரிக்கிறாள் !
எனக்காய் அழுகிறாள் !
பசி என்ற நினைத்த மாத்திரத்தில்
எனக்கு படையிலிட்டு
பரிமாறுகிறாள் !
அவளோடு தொடங்கும்
என் பொழுது
அவளின்றி முடிய
மறுக்கிறது !
அவள் மனத் தெம்பு
குறையும் நேரத்தில்
என் வார்த்தைகளிலிருந்து
திராணியை சேகரிக்கிறாள் !
நான் சோர்ந்து விழும் போது
நம்பிக்கை வார்த்தைகளில்
எனைத் தாங்கி நிற்கிறாள்
அவள் விரல் நுணியில்
என் வலிக்கான
மருந்து
என் விழிச்சிரிப்பில்
அவள் விசும்பலின்
முடிவு
எனக்கும் அவளுக்குமானது
தாமரைக்கும் சூரியனுக்குமான
உறவு
அவளுக்காகவே
நான் உதிக்கிறேன் !
எனக்காகவே
அவள் மலர்கிறாள்
யார் இவள் எனக்கு ?
உறவுகள் சொல்லி
அவள் அன்பின்
ஆழத்தை குறைத்திட
மனமில்லை
ஏன் எனில்
அவள்
எனக்கு எல்லாமுமானவள் !

5 comments:

  1. Hey great... Who is that Aellaamumaanaval?

    ReplyDelete
  2. யாரந்த எல்லமுமானவள்?

    லக்கி கேர்ள்.

    ReplyDelete
  3. கவிதை, கவிதை. பின்னுறீங்க பாசு.

    அப்போ, கவிதை தொகுப்பை எப்போ வெளியிடலாம்?

    ReplyDelete
  4. தமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete