Powered By Blogger

Wednesday, May 26, 2010

மாவோயிஸ்டுகள் ?

ஆயுதப் புரட்சியின் மூலம்
மீட்சியை பெறுவதாய்
சொல்கிறார்கள் !
ரயில் கவிழ்ப்பை தவிர
வேறு புரட்சி செய்ததாய்
தெரியவில்லை ?

ஏழை பங்காளர்கள் என
மார் தட்டி நிற்கிறார்கள்
ஏழைகளை தவிர
வேறு யாரையும்
கொன்றதாய் தெரியவில்லை ?

மார்கஸையும், மாவோவையும்
போற்றி புகழ்கிறார்கள்
மார்க்சிஸ்ட்டுகளை கொல்வதை
தவிர வேறு
லட்சியம் கொண்டதாய் தெரியவில்லை ?

பழங்குடி மக்களுக்காய்
பாடுபடுவதாக சொல்கிறார்கள் !
பகடைகாய்களாய் அன்றி
அவர்களை பண்படுத்தியதாய்
தெரியவில்லை ?
முதலாளித்துவத்தை
அடியோடு அழிக்கும் அதிகாரம்
கொண்டதாய் சொல்பவர்கள் !
(காங்கிரஸ்) பெருமுதலாளிகளுக்கு
காவல் காப்பதில் காட்டும்
கன்னியத்தை வேறு
எங்கும் காட்டியதாய் தெரியவில்லை ?

மாவோயிஸ்டுகள் எனச் சொல்லி
மம்தாயிஸ்டுகளாக மாறிப்போனவர்களே !
மாற்றம் ஒன்றை தவிர
மாற வேறு ஒன்று இல்லை
மார்க்சிஸ்டுகள் சிந்திய ரத்தம்
ஒரு போதும் வீண் ஆனதில்லை

அப்பாவிகளை கொல்வதை
அடியோடு நிறுத்துங்கள் !
மக்கள் புரட்சி மகத்தானதே
அதை மக்களுக்காக செய்ய
முனையுங்கள் !
சாமானியர்களின் சமாதியில்
சமதர்ம பூங்கா அமைத்திட முடியாது !
அதை உண்மை பொதுவுடமை இயக்கங்கள்
ஒரு போதும் அனுமதிக்காது !

8 comments:

  1. செம்மல்-நன்றாக உள்ளது-உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறாய். நன்றி----- உனது கவிதையை எனது பே புக்கில் போட்டுள்ளேன்


    http://www.facebook.com/profile.php?id=545231892

    ReplyDelete
  2. //சாமானியர்களின் சமாதியில்
    சமதர்ம பூங்கா அமைத்திட முடியாது//

    அருமையான வரிகள்....

    ReplyDelete
  3. கவிஞரே,

    தொடருங்கள் உங்கள் தாக்குதலை. அருமையாக உள்ளது உங்கள் நடை.

    இருந்தாலும்கூட இன்ஸ்பிரேஷன் தேவை எனில் எங்கள் இன்ஸ்டன்ட் கவிஞர் "கவிஞர் தமிழ்குட்டி" அவர்களின் வலைப்பூவை காண்க.

    கவிஞர் தமிழ்குட்டி = http://tamilkutty.blogspot.com/

    ReplyDelete
  4. தயவு செய்து இந்த வார்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள்.

    கமென்ட் போடும்போது கடுப்பாக உள்ளது.

    ReplyDelete
  5. Thanks for removing word verification.

    ReplyDelete
  6. good poem in the time of current political crisis for further debates.

    ReplyDelete