கதை கேளு...கதை கேளு...
ஜனநாயக நாடு ஒன்று
ஜனப்படுகொலைக்கு துணை போன
துயரமான
கதை கேளு...கதை கேளு...
போரும் நடக்கல !
பூகம்பமும் வரல !
ஒரே ராத்திரியில
பல்லாயிரம் பேர்
பொசுங்கிப் போன
பரிதாபமான
கதை கேளு...கதை கேளு...
கயவர்கள் சில பேரு...
காத்துல நஞ்சு கலந்து...
உசிரு குடிச்ச உக்கிரத்தை
வருஷம் 30ஆகியும்
ஏன்னு கேட்க
துப்பில்லா தேசத்தின்
கதை கேளு...கதை கேளு...
உயிருக்கு ஒரு ருபாய் அபராதம்னு
20ஆயிரம் பேர கொன்னவனுக்கு
20ஆயிரம் ரொக்கத்த
அபராதம் விதிச்சு
தீர்ப்பு சொல்லி கலங்கப்பட்ட
நீதித் துறையோட
கதை கேளு...கதை கேளு...
ஒரு அமெரிக்கன்
உசுருக்கு முன்னாடி
ஒரு லட்சம் இந்திய உசிரு
மசிராகிப் போன
மானங்கெட்ட
கதை கேளு...கதை கேளு...
என்ன கதை கேட்டு
என்னதான் ஆச்சுதுங்க
தாமதமா கிடைச்சாலும்
உருப்படியா கிடைக்காத
நீதி ஒரு நீதியில்லை !
விஷவாயு கசிவால மாண்ட
மக்களுக்கு
இடுகாட்டில் வைக்ப்பட்ட
மற்றுமொரு தீ.....
இந்த நீ நீ நீ நீ நீ நீ......தி (தீ)