Saturday, July 31, 2010
பாப்கார்ன் ஷாப்பிங்...
Tuesday, July 13, 2010
அலைபேசிகளுக்கு நன்றி
துள்ளல் பாட்டையோ ?
Wednesday, July 7, 2010
புறமுதுகுப் பேசுவோர்!
பிறர் வாட செயல்கள்
செய்வோர் !
இவர் வாழ வழி
எதுவென அறியாதோர் !
அவன் அப்படி; இவள் இப்படி;
இதுவே இவர் பேச்சின் அடிப்படை !
அடுத்தவர் அந்தரங்கத்தில்
கூசாமல் நுழைந்து பார்க்கும்
பாழான கலாச்சாரம் !
பிறர் குறித்து அவதூறு
பேசி திருப்தி அடைவதே
இவர் வழக்கம் !
இருப்பதை இல்லை என்பார் !
இல்லாததை இருக்குது என்பார் !
இறுதி வரை உண்மை அறியாமல்
ஊருக்கு உபதேசம் அளித்திடுவார் !
சிறியதும் பெரியதுமாய்
பொய்கள் பேசி
சிற்றின்ப வெள்ளத்தில்
மூழ்கி தெளித்து
இவர் எடுக்கும்
முத்தினை முகர்ந்து பார்த்தால்
நாற்றம் குடலை புரட்டும்
நாச்சக்கார சக்தி இவர்கள்...
நல்லோரே கேளுங்கள் !
புறமுதுகுப் பேச்சுக்கு
ஒரு போதும் பணியாதீர்
இல்லையேல்
மன இறுக்த்தின் கோரப் பிடிக்கு
சிக்கி தீராத பிணிக்கு ஆளாவீர் !
புறமுதுகு பேச்சால் நாட்டுக்கும்
பயனில்லை !
அதை பேசி திரியும்
நயவஞ்சகர்களுக்கும்
பயனில்லை !
அவசியமற்ற பேச்சுக்களை
தவிர்த்திடுவோம்
ஆரோக்கியமான சமுதாயம்
அமைத்திடுவோம் !