Powered By Blogger

Saturday, July 31, 2010

பாப்கார்ன் ஷாப்பிங்...

ஷாப்பிங்...
உலகமயம் நமக்களித்த
உன்னத பரிசு !
உலகமயத்தை எதிர்ப்பவனாயிருந்தாலும்
இன்று நானும் சென்றேன்
ஷாப்பிங்
அவளோடு...
ஆதிகாலத்தில் வண்டி கட்டி
சந்தைக்குச் சென்ற வம்சம்
என்பதால்
ஷாப்பிங்
பெரிதாய் உருத்தவில்லை...
எம் ஷாப்பிங் பயணத்திற்கு
முதல் எதிரியாய்
வந்தது
அந்த பேய் மழை !

என்னடா ?
நம்ம வர்றதே எப்பாவது ஒரு தடவை
ஏன் இப்படி பண்ணுது இந்த மழை
என
சிங்காரி அவள் சிணுங்கியது கேட்ட
மேகங்கள்
சட்டென நிறுத்தியது தூவாணத்து
தூறலை !

கடை கடையாய்
ஏறி களைத்து போவோர் பலர்
ஆனால்
அதுவே கடை
இதுவே உடை
என அழகாய்
அளவாய்
சொல்பவள் அவள் !
உடை எடுக்கச் சென்றதோ
எனக்கு
ஆனால் ஓடி ஓடி அலைந்ததோ
அவள் !
கர்ப்பத்தில் இருக்கும்
குழந்தை
சிவப்பாய் பிறந்திட
குங்குமப் பூ
உண்ணும் அன்னையையாய்
எனக்கான உடையை
அவள்
தேடி தேடி தேர்ந்தெடுத்த அழகு
என் வாழ்வில்
வசந்தத்தின் வரவு !
சாலைகளை கடக்க
அவள் கையை நானும்
என் கையை அவளும்
பிடித்திருந்த வடிவை
பொறைமையுறாதோர்
பூமியில் இல்லை !

யார் யாருக்கோ எதில் எதிலோ
உயிர்
அவளுக்கோ ஊர் சுற்றுவதில்
உயிர் !
ஊர் சுற்றும் பெண் மக்கள்
வீட்டுக்கு அடங்கார் !
எனச் சொல்லும்
ஆணாதிக்க கூற்றை உடைத்தெறியும்
குணமது !

எல்லாவற்றுக்கும்
உண்டு ஒரு கணக்கு !
எம் பயணத்திற்கும்
இருந்தது ஒரு கணக்கு !

ஆதியில் வாங்கிய பாப்கார்ன்
பொட்டலமே
எமக்கான மணிக்கூண்டு !
பாப்கார்ன் தீர தீர
எம் பயணம் முடிய
இருப்பதை உணர்த்தியது

இறுதியில் இனிமையாய் முடிந்தது
ஷாப்பிங்
காலியான பாப்கார்ன்
பொட்டலத்தோடு !
எத்தனை பாப்கார்ன்கள்
தீர்ந்தாலும்
தீராது ஷாப்பிங் மீதான
எம் ஆசை !

இன்று முடிந்திருக்கும் ஷாப்பிங்
ஒரு இடைவேளையே !
எம் இதயம் இனிமைப்பட
என்றும் தொடரும்
ஷாப்பிங்
ஒரு தொடர்கதையே !


Tuesday, July 13, 2010

அலைபேசிகளுக்கு நன்றி


தந்தையை இழந்த சோகத்தில்
நின்றிருந்தான் தோழன்...

கிடத்தப்பட்டிருந்த சடலத்திற்கு
இறுதி மரியாதையை
சிறப்புடன் செய்து கொண்டிருந்தார்
இடுகாட்டு ஊழியர்...


அருகில் நின்றிருந்த
அனைவரிடத்திலும்
அமைதி மட்டுமே இருந்தது...


இறந்த மனிதனுக்கான
இறுதி மரியாதையென
அந்த
மௌனத்தை
பார்த்திருந்தேன்...

ஆனாலும்
எனக்குள் ஒரு பயம் !
இன்னும் சில நிமிடங்களில்
முடிய உள்ள
இறுதி காரியத்தில்

நான் எதிர்பார்த்த
அந்த
அசம்பாவிதம்
நடந்திடக் கூடாதே !

அனைவரிடமும் சொல்லி
தடுத்திட துடித்தது
மனம்...

சத்தமில்லாமல் சமிக்கைகள்
கொடுப்பது எப்படி?

ஒன்றும் புரியவில்லை !
நல்ல வேளை நிமிடங்களில்
முடிந்தது
காரியம்

இடுகாட்டு அறையில்
இருந்து வெளியேறி
பெரு மூச்சு விட்டபடி
நன்றி
சொன்னேன் !
யாருக்கு ?
துக்க காரியத்தின் போது
துள்ளல் பாட்டையோ ?
வடிவேலுவின்
நகைச்சுவை வசனத்தையோ ?
ரிங்டோனாக ஒலித்து
ஆழமாய் ஆதியிலிருந்த
அமைதியை
கெடுத்திவிடாத
அத்தனை
அலைபேசிகளுக்கும் !
அதனை அணைத்து
வைத்திருந்த
என் மனித நண்பர்களுக்கும் !


Wednesday, July 7, 2010

புறமுதுகுப் பேசுவோர்!



பிறர் வாட செயல்கள்

செய்வோர் !

இவர் வாழ வழி

எதுவென அறியாதோர் !

அவன் அப்படி; இவள் இப்படி;

இதுவே இவர் பேச்சின் அடிப்படை !

அடுத்தவர் அந்தரங்கத்தில்

கூசாமல் நுழைந்து பார்க்கும்

பாழான கலாச்சாரம் !

பிறர் குறித்து அவதூறு

பேசி திருப்தி அடைவதே

இவர் வழக்கம் !

இருப்பதை இல்லை என்பார் !

இல்லாததை இருக்குது என்பார் !

இறுதி வரை உண்மை அறியாமல்

ஊருக்கு உபதேசம் அளித்திடுவார் !

சிறியதும் பெரியதுமாய்

பொய்கள் பேசி

சிற்றின்ப வெள்ளத்தில்

மூழ்கி தெளித்து

இவர் எடுக்கும்

முத்தினை முகர்ந்து பார்த்தால்

நாற்றம் குடலை புரட்டும்

நாச்சக்கார சக்தி இவர்கள்...

நல்லோரே கேளுங்கள் !

புறமுதுகுப் பேச்சுக்கு

ஒரு போதும் பணியாதீர்

இல்லையேல்

மன இறுக்த்தின் கோரப் பிடிக்கு

சிக்கி தீராத பிணிக்கு ஆளாவீர் !

புறமுதுகு பேச்சால் நாட்டுக்கும்

பயனில்லை !

அதை பேசி திரியும்

நயவஞ்சகர்களுக்கும்

பயனில்லை !

அவசியமற்ற பேச்சுக்களை

தவிர்த்திடுவோம்

ஆரோக்கியமான சமுதாயம்

அமைத்திடுவோம் !