Powered By Blogger

Wednesday, July 7, 2010

புறமுதுகுப் பேசுவோர்!



பிறர் வாட செயல்கள்

செய்வோர் !

இவர் வாழ வழி

எதுவென அறியாதோர் !

அவன் அப்படி; இவள் இப்படி;

இதுவே இவர் பேச்சின் அடிப்படை !

அடுத்தவர் அந்தரங்கத்தில்

கூசாமல் நுழைந்து பார்க்கும்

பாழான கலாச்சாரம் !

பிறர் குறித்து அவதூறு

பேசி திருப்தி அடைவதே

இவர் வழக்கம் !

இருப்பதை இல்லை என்பார் !

இல்லாததை இருக்குது என்பார் !

இறுதி வரை உண்மை அறியாமல்

ஊருக்கு உபதேசம் அளித்திடுவார் !

சிறியதும் பெரியதுமாய்

பொய்கள் பேசி

சிற்றின்ப வெள்ளத்தில்

மூழ்கி தெளித்து

இவர் எடுக்கும்

முத்தினை முகர்ந்து பார்த்தால்

நாற்றம் குடலை புரட்டும்

நாச்சக்கார சக்தி இவர்கள்...

நல்லோரே கேளுங்கள் !

புறமுதுகுப் பேச்சுக்கு

ஒரு போதும் பணியாதீர்

இல்லையேல்

மன இறுக்த்தின் கோரப் பிடிக்கு

சிக்கி தீராத பிணிக்கு ஆளாவீர் !

புறமுதுகு பேச்சால் நாட்டுக்கும்

பயனில்லை !

அதை பேசி திரியும்

நயவஞ்சகர்களுக்கும்

பயனில்லை !

அவசியமற்ற பேச்சுக்களை

தவிர்த்திடுவோம்

ஆரோக்கியமான சமுதாயம்

அமைத்திடுவோம் !

7 comments:

  1. பிறரை பற்றி புறம் பேசுவோரை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன். அந்த நா, நம்மை பற்றியும் என்னவேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் பேசலாம் என்பதால்.

    அதைப்போலவே புறம் பேசுவோரின் நட்பையும் தவிர்ப்பது நலம்.

    ReplyDelete
  2. வலைச்சரம் பார்த்து வந்தேன்,, நன்றாக உள்ளது ,, தொடருங்கள்

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது.. :)

    ReplyDelete
  4. உங்களின் ஒவ்வொரு கவிதைகளும் ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளது. இது வெறும் கவிதைகள் அல்ல ...ஒவ்வொரு தனி மனிதனின் கடமைகளை உணர்த்தும் வார்த்தைகள் ...வாழ்த்துகள் செம்மல்!

    ReplyDelete
  5. தல,

    இந்த போஸ்டரை பார்த்தீங்களா?

    வெங்கட்,
    வெடிகுண்டு வெங்கட்.
    அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

    ReplyDelete