Powered By Blogger

Saturday, February 11, 2012

எங்கு சென்றாய் தோழா ?


வந்துவிடு தோழா…
வகுப்புகளில் உன்தன்
மார்க்சிய வார்த்தைகளில் நாங்கள்
எங்களை மறந்திட…

வந்துவிடு தோழா…
உலக நடப்புகளை ஒரு நொடிப்பொழுதில்
நீ உரைத்திட
அதை கேட்டு நாங்கள் உறைந்திட
வந்துவிடு தோழா….

உலகமயமும்,தனியார்மயமும்,தாராளமயமும்
எங்களை உலுக்கி எடுக்கிறது….
உரிய வழி காண,
களம் கண்டு போராட…
வந்துவிடு தோழா….

எத்தனைதான் அழைத்தாலும்
நீ வரமாட்டாய் என தெரியும்…

என்ன செய்ய ?
மக்களை காக்க போராடும்
நாங்கள்…
உன்னை காக்க மறந்தோமே…!

இன்குலாப் சிந்தாபாத்
காம்ரேட் w.r சிந்தாபா

Thursday, February 9, 2012

சாதி வேண்டுமே !


பாசமானவன் நீ

என்றால் அவள்…

பணக்காரன் இல்லை என்றார்கள்

அவள் பெற்றோர்…

அன்பானவன் நீ

என்றால் அவள்…

அந்தஸ்து இல்லையே என்றார்கள்

அவள் பெற்றோர்…

எல்லாம் சரி அவன் சத்தியவான்

சேர்த்து வையுங்களேன்

என்றால் அவள்….

சத்தியவான் எல்லாம் சரி

சாதிக்காரன் இல்லையே என்றார்கள் பெற்றோர்….

எங்கு போவேன் நான் ?


காதலித்தவளை கரம்பிடிக்க....

பணம் வேண்டும் என்றார்கள்
சம்பாதித்தேன்...

அந்தஸ்து வேண்டும் என்றார்கள்
அயராது உழைத்து பெற்று்க்கொண்டேன்...

அழகு வேண்டும் என்றார்கள்
அப்படி இப்படி தேர்த்திவிட்டேன்...

சண்டாளர்கள்...
கடைசியாய்
சாதி வேண்டும் என்கிறார்கள்

எங்கு போவேன் நான்...