Powered By Blogger

Saturday, February 11, 2012

எங்கு சென்றாய் தோழா ?


வந்துவிடு தோழா…
வகுப்புகளில் உன்தன்
மார்க்சிய வார்த்தைகளில் நாங்கள்
எங்களை மறந்திட…

வந்துவிடு தோழா…
உலக நடப்புகளை ஒரு நொடிப்பொழுதில்
நீ உரைத்திட
அதை கேட்டு நாங்கள் உறைந்திட
வந்துவிடு தோழா….

உலகமயமும்,தனியார்மயமும்,தாராளமயமும்
எங்களை உலுக்கி எடுக்கிறது….
உரிய வழி காண,
களம் கண்டு போராட…
வந்துவிடு தோழா….

எத்தனைதான் அழைத்தாலும்
நீ வரமாட்டாய் என தெரியும்…

என்ன செய்ய ?
மக்களை காக்க போராடும்
நாங்கள்…
உன்னை காக்க மறந்தோமே…!

இன்குலாப் சிந்தாபாத்
காம்ரேட் w.r சிந்தாபா

1 comment:

  1. தோழர்,
    கடந்த இரு வாரமாக உங்களுக்கு அலைபேசியில் அழைத்துக்கொண்டே இருக்கிறேன். பதில் இல்லை.

    ReplyDelete