Powered By Blogger

Saturday, March 3, 2012

நான் யார் ?


வாகனத்தின் நீளம் 5 அடி

கடந்து செல்ல

இரு நொடி போதும்...

ஆனாலும் ஆயிரம்

யோசனைகளை...

அழுக்காயிருந்தாலும்

ஆபத்துக்கு பாவமில்லை

என முகம் மூடிய

கைகுட்டை...

இருந்தும் நாற்றம்

நாசியில் புக

வாந்தி வந்தது...

முகத்தை சுளித்து

சிரிப்பை

மறந்து கடந்தேன்

அந்த வாகனத்தை...

வாகனத்தில் நின்றிருந்தவர்

என்னை பார்த்து சிரித்தார்....

சினம் தலைக்கேறி அவரை பார்த்து கேட்டேன்

என்னையா சிரிக்கிற ?

சிரிப்பை நிறுத்தாமல்

அவர் சொன்னார்

நீ போட்ட குப்பையை

நான் அள்ளுரேன்

ஆனா உன்னால்

அரைநொடி கூட நாத்தைத்தை

பொறுக்க முடியல?

பொட்டில் தெரித்தது எனக்கு

ஆம்

யாரோ போடும் யாரோ தான்

அள்ளுகிறார்கள்

ஆனாலும் ஆயிரம் பேதங்கள்...

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று...

அப்படியெனில்

யார் நான் ?

நிச்சயம் தாழ்ந்தவனே...

No comments:

Post a Comment