Powered By Blogger

Sunday, May 9, 2010

ராமனின் சீதைக்கு !

லங்கையில் கண்ணீரில் குளித்த நீ
உன் கணவனின் கண்மூடித்தனத்தால்
தீயில் குளித்தாய்....
கற்பு என்னும் கற்பனைக்கு
நீ தான் இலக்கணமாம் !
உன்னை காரணம் காட்டி
இங்கே ஓராயிரம் சீதைகளை எரித்துவிட்டார்கள்...
எங்கள் நவயுக ராமன்கள் !
தீயில் குளித்த நீ
எழுந்தது போல்
எங்கள் தாய்மார்கள் எழுவது இல்லையே !
தவறான உதாரணத்தை தரணிக்கு தந்துவிட்டாய்
மன்னித்து விடு
தாயே
உன்னை மன்னிக்க எனக்கு மனமில்லை !


4 comments:

  1. சரியான தினத்தில் சரியான கவிதை. நண்பா நச் சென்று சொல்லியிருக்கிறாய்

    ReplyDelete
  2. மாணிக்க மனமில்லை மன்னிக்க - இதுதான் சரியான தலைப்பு. (பட்டுகோட்டை பிரபாகரின் நாவலின் தலைப்பும்கூட)

    ReplyDelete
  3. மன்னிக்க மனமில்லை மன்னிக்க - இதுதான் சரியான தலைப்பு. (பட்டுகோட்டை பிரபாகரின் நாவலின் தலைப்பும்கூட)

    ReplyDelete
  4. Nice thought... Keep it up!!!

    ReplyDelete