என்னுடன் சிரிக்கிறாள் !
எனக்காய் அழுகிறாள் !
பசி என்ற நினைத்த மாத்திரத்தில்
எனக்கு படையிலிட்டு
பரிமாறுகிறாள் !
அவளோடு தொடங்கும்
என் பொழுது
அவளின்றி முடிய
மறுக்கிறது !
அவள் மனத் தெம்பு
குறையும் நேரத்தில்
என் வார்த்தைகளிலிருந்து
திராணியை சேகரிக்கிறாள் !
நான் சோர்ந்து விழும் போது
நம்பிக்கை வார்த்தைகளில்
எனைத் தாங்கி நிற்கிறாள்
அவள் விரல் நுணியில்
என் வலிக்கான
மருந்து
என் விழிச்சிரிப்பில்
அவள் விசும்பலின்
முடிவு
எனக்கும் அவளுக்குமானது
தாமரைக்கும் சூரியனுக்குமான
உறவு
அவளுக்காகவே
அவளுக்காகவே
நான் உதிக்கிறேன் !
எனக்காகவே
அவள் மலர்கிறாள்
யார் இவள் எனக்கு ?
உறவுகள் சொல்லி
அவள் அன்பின்
ஆழத்தை குறைத்திட
மனமில்லை
ஏன் எனில்
அவள்
எனக்கு எல்லாமுமானவள் !
Hey great... Who is that Aellaamumaanaval?
ReplyDeleteயாரந்த எல்லமுமானவள்?
ReplyDeleteலக்கி கேர்ள்.
கவிதை, கவிதை. பின்னுறீங்க பாசு.
ReplyDeleteஅப்போ, கவிதை தொகுப்பை எப்போ வெளியிடலாம்?
தமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?
ReplyDeletenandru
ReplyDelete