மீட்சியை பெறுவதாய்
சொல்கிறார்கள் !
ரயில் கவிழ்ப்பை தவிர
வேறு புரட்சி செய்ததாய்
தெரியவில்லை ?
ஏழை பங்காளர்கள் என
மார் தட்டி நிற்கிறார்கள்
ஏழைகளை தவிர
வேறு யாரையும்
கொன்றதாய் தெரியவில்லை ?
மார்கஸையும், மாவோவையும்
போற்றி புகழ்கிறார்கள்
மார்க்சிஸ்ட்டுகளை கொல்வதை
தவிர வேறு
லட்சியம் கொண்டதாய் தெரியவில்லை ?
பழங்குடி மக்களுக்காய்
பாடுபடுவதாக சொல்கிறார்கள் !
பகடைகாய்களாய் அன்றி
அவர்களை பண்படுத்தியதாய்
தெரியவில்லை ?
முதலாளித்துவத்தை
அடியோடு அழிக்கும் அதிகாரம்
கொண்டதாய் சொல்பவர்கள் !
(காங்கிரஸ்) பெருமுதலாளிகளுக்கு
காவல் காப்பதில் காட்டும்
கன்னியத்தை வேறு
எங்கும் காட்டியதாய் தெரியவில்லை ?
மாவோயிஸ்டுகள் எனச் சொல்லி
மம்தாயிஸ்டுகளாக மாறிப்போனவர்களே !
மாற்றம் ஒன்றை தவிர
மாற வேறு ஒன்று இல்லை
மார்க்சிஸ்டுகள் சிந்திய ரத்தம்
ஒரு போதும் வீண் ஆனதில்லை
அப்பாவிகளை கொல்வதை
அடியோடு நிறுத்துங்கள் !
மக்கள் புரட்சி மகத்தானதே
அதை மக்களுக்காக செய்ய
முனையுங்கள் !
சாமானியர்களின் சமாதியில்
சமதர்ம பூங்கா அமைத்திட முடியாது !
அதை உண்மை பொதுவுடமை இயக்கங்கள்
ஒரு போதும் அனுமதிக்காது !
Good one!
ReplyDeleteசெம்மல்-நன்றாக உள்ளது-உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறாய். நன்றி----- உனது கவிதையை எனது பே புக்கில் போட்டுள்ளேன்
ReplyDeletehttp://www.facebook.com/profile.php?id=545231892
//சாமானியர்களின் சமாதியில்
ReplyDeleteசமதர்ம பூங்கா அமைத்திட முடியாது//
அருமையான வரிகள்....
கவிஞரே,
ReplyDeleteதொடருங்கள் உங்கள் தாக்குதலை. அருமையாக உள்ளது உங்கள் நடை.
இருந்தாலும்கூட இன்ஸ்பிரேஷன் தேவை எனில் எங்கள் இன்ஸ்டன்ட் கவிஞர் "கவிஞர் தமிழ்குட்டி" அவர்களின் வலைப்பூவை காண்க.
கவிஞர் தமிழ்குட்டி = http://tamilkutty.blogspot.com/
தயவு செய்து இந்த வார்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள்.
ReplyDeleteகமென்ட் போடும்போது கடுப்பாக உள்ளது.
test
ReplyDeleteThanks for removing word verification.
ReplyDeletegood poem in the time of current political crisis for further debates.
ReplyDelete